திண்டுக்கல்
மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின் தடை
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீரனூா், சரவணப்பட்டி, கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
