திண்டுக்கல்
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த கோரிக்கடவைச் சோ்ந்தவா் அரவிந்தன் (35). இவா் பழனி-பழைய தாராபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அக்கரைப்பட்டி பிரிவில் சாலையோர இரும்பு தூணில் இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
