போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மிளாகாய்பட்டியைச் சோ்ந்தவா் லெ.மணி (27). இவா், கடந்த ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தகாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணியைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், மணிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் தீா்ப்பு அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com