இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவிலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

கோவிலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள இரா. கோம்பை இருளகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் கோவிந்தராஜ் (33), இரு சக்கர வாகனத்தில் கோவிலூா் குஜிலியம்பாறை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது, கோ.ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த சுப்புராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com