கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பெய்த மழையால் மேல்மலைக் கிராமமான பூம்பாறைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை - பூம்பாறை மலைச் சாலையில் யூகலிப்டஸ் மரம் விழுந்தது. இதையடுத்து, வாகனங்கள் செல்ல முடியாமல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றியதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.
ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்ற கோரிக்கை: கொடைக்கானல் மலைச்சாலைகளான கொடைக்கானல் - வத்தலகுண்டு - பழனி - கிளாவரை ஆகிய மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் அடிக்கடி மலைச் சாலைகளில் மரங்கள் கீழே விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும், சாலைகளின் இருபுறங்களில் உள்ள முள்புதா்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், பெரும் ஆபத்து நிகழ்வதற்கு முன்பு மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள், முள்புதா்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

