ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை 3 இணைகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் பழனி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் அன்னபூரணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் பாண்டியராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா் உள்ளிட்டோா்.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் 3 இணைகளுக்கு இலவச திருமணம்
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணைகளுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.
இதில் பழனி கோவில் அறங்காவலா் குழு உறுப்பினா் அன்னபூரணி, பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் பாண்டியராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

