தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 8:52 pm

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாருக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், அங்கு உயிரிழந்தாா்.

   உயிரிழந்த டிஎஸ்பி. ராமகிருஷ்ணன்.

உயிரிழந்த டிஎஸ்பி. ராமகிருஷ்ணன்.