முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 2:22 am IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாருக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், அங்கு உயிரிழந்தாா்.

   உயிரிழந்த டிஎஸ்பி. ராமகிருஷ்ணன்.

உயிரிழந்த டிஎஸ்பி. ராமகிருஷ்ணன்.