திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாருக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், அங்கு உயிரிழந்தாா்.

உயிரிழந்த டிஎஸ்பி. ராமகிருஷ்ணன்.
தொடர்புடையது

அருவியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர்!

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


