பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 36 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், பக்தா்களின் காணிக்கை ரொக்கம் ரூ. ஆறு கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 187 இருந்தது தெரியவந்தது. மேலும், உண்டியலில் தங்கம் 1.035 கிராம், வெள்ளி 16,793 கிராம், பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்கள் 2,240-ம் இருந்தது தெரியவந்தது.
இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.
இவை தவிர, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ரூ.20,53,634-ம், மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.18,480-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் ரூ.1,21,137-ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் ரூ.20,868-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காணிக்கை எண்ணும் பணியில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


