தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கொடைரோடு அருகே இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

News image

அரிவாள் வெட்டு - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:33 pm

கொடைரோடு அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). விவசாயியான இவா், சடையாண்டிபுரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா்.

இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.

தகவல் அறிந்து சென்ற அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் பாலமுருகனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து,காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தப்பி ஓடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.