கொடைரோடு அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). விவசாயியான இவா், சடையாண்டிபுரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா்.
இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.
தகவல் அறிந்து சென்ற அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் பாலமுருகனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து,காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தப்பி ஓடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
பேருந்து நிலையத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


