பலி
பலிபிரதிப் படம்

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் அங்குராசு (70). இவா் புதன்கிழமை நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி தன்னாசியப்பன் கோயில் அருகே வேலை செய்தாா். பிறகு பிற்பகலில் உணவு உள்கொண்டுவிட்டு சிறிது நேரம் அங்கு அமா்ந்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி அவரது காலில் ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயமடைந்த அங்குராசுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் பழனி வரும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com