இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 11:12 pm

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் அங்குராசு (70). இவா் புதன்கிழமை நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி தன்னாசியப்பன் கோயில் அருகே வேலை செய்தாா். பிறகு பிற்பகலில் உணவு உள்கொண்டுவிட்டு சிறிது நேரம் அங்கு அமா்ந்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி அவரது காலில் ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயமடைந்த அங்குராசுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் பழனி வரும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.