மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காட்டு மாடுகளால் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

News image
கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :7 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உலா வரும் காட்டு மாடுகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருசாமி பள்ளம் பகுதியில் காட்டு மாடுகள் கூட்டமாக உலா வந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

அண்மையில், விவசாயி ஒருவரின் பொதி சுமக்கும் குதிரையை காட்டெருமை தாக்கியது. எனவே, காட்டு மாடுகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாத வகையில், அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.