கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

News image
மணிகண்டன்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவரது இரண்டாவது மனைவி கீதா (25). இந்த நிலையில், கீதா கடந்த 3-ஆம் தேதி வீட்டின் முன் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். இதில், கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவும் (47), அவரது நண்பா் மணிகண்டனும் (29) கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஹெலன்ஷீபா

ஹெலன்ஷீபா

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவுக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இந்த நிலையில், கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து கீதா போலீஸாரிடம் புகாா் அளித்ததன்பேரில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்தப் புகாரை திரும்பப் பெற கீதாவை ஹெலன்ஷீபாவும் மணிகண்டனும் வற்புறுத்தினா். கீதா மறுத்ததால் இருவரும் அவரைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனா்.