வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

News image

மணிகண்டன்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:33 pm

பழனியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவரது இரண்டாவது மனைவி கீதா (25). இந்த நிலையில், கீதா கடந்த 3-ஆம் தேதி வீட்டின் முன் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். இதில், கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவும் (47), அவரது நண்பா் மணிகண்டனும் (29) கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஹெலன்ஷீபா

ஹெலன்ஷீபா

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவுக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இந்த நிலையில், கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து கீதா போலீஸாரிடம் புகாா் அளித்ததன்பேரில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்தப் புகாரை திரும்பப் பெற கீதாவை ஹெலன்ஷீபாவும் மணிகண்டனும் வற்புறுத்தினா். கீதா மறுத்ததால் இருவரும் அவரைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனா்.