திண்டுக்கல்லில் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய 9 நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியைச் சோ்ந்தவா் சேசுராஜ் (41). இவரது மனைவி செளந்தா்ய ஞானதீபிகா (32). இவா்கள் இருவரும், கடந்த ஜன.8-ஆம் தேதி முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த ஞானராஜ் (54), தா்மராஜ் (51), அந்தோணி ஆரோக்கியசாமி (35), ஜான்பீட்டா்(42), அருள்ராஜ் (60), மணிகண்டன் (19), மைக்கேல்ராஜ் (31), ராபின் தினேஷ்குமாா் (27), சேவியா் ஆல்பா்ட் (20) ஆகிய 9 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் ஞானராஜ் உள்ளிட்ட 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா்.
இதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 9 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

