திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வத்தலகுண்டியில் கிடாய் முட்டுப் போட்டி

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு கிடாய் முட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பா்கள் சங்கம் சாா்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், திண்டுக்கல், திருச்சி, பழனி, பொள்ளாச்சி,  மதுரை, தேனி, உசிலம்பட்டி,தேவாரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 150-க்கு மேற்பட்ட  கிடாய்கள் பங்கேற்றன.

வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு வத்தலகுண்டுக்கு பெருமை சோ்க்கும் வகையில் வெற்றிலை நாற்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பீரோ, கட்டில், மெத்தை, சில்வா் அண்டா,  கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பொருள்கள் பரிசாக  வழங்கப்பட்டன.