தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேகம்பூா் சிக்கந்தா் சாகிப் தெருவைச் சோ்ந்தவா் இ. முகமது ஷாபான் சேட் (24). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி கைது செய்தனா். இவரிடமிருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், முகமது ஷாபான் சேட்டை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா்.