பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:56 pm

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜான்பாஸ்டின் வாழ்த்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தம், தினக் கூலி, வெளிமுகமை அடிப்படையிலான பணிவாய்ப்பை நிறுத்தி, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் முறையான ஊதிய விகிதங்களில் நிரப்ப வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ம.சுகந்தி, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் க.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.