தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொப்பம்பட்டியில் ரூ.4.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.17 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், ரூ.2.26 கோடியில் முடிவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதற்கு பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பிரசன்னா, சஞ்சய்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்தும் பேசினாா்.

இதில் தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாஹிரா, குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.