மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை யாசகம் எடுத்து சாலை மறியல் செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஏ.ஜோசப் ஸ்டாலின், தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
போராட்டத்தின்போது, ஆந்திரம், புதுச்சேரி, தெலங்கானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழகத்திலும் மாற்றுத்
திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். கையில் தட்டுகளை ஏந்தி யாசகம் எடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


