தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

2 ஆவது நாளாக மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 150 போ் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 7:19 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், உதவித் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரச் செயலா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை பழனி நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.