எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

2 ஆவது நாளாக மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 150 போ் கைது

News image
கைது
Updated On :13 பிப்ரவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், உதவித் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரச் செயலா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை பழனி நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.