சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்! பொது மக்கள் அச்சம்!

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமம் கூக்கால் பகுதியில் சனிக்கிழமை காட்டு யானைகள் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

மேலும், அவா்கள் வெளியே செல்ல முடியாமலும், தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாமலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், மாலை, இரவு நேரங்களில் காற்றுடன் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.

மேலும், வனப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் பணியில் வனப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

வனப் பகுதிகளில் தண்ணீா்ப் பற்றாக்குறையால் வன விலங்குகளான காட்டு யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்டவை கிராமப் பகுதிகளுக்கும், வனப் பகுதிகளையொட்டிய விவசாயத் தோட்டங்களுக்கும் வரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டுநா்கள் கவனமாகச் செல்ல வேண்டும். காட்டு யானைகள் மலைச் சாலைகளில் நடமாடினால் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். காட்டு யானைகள் அச்சமடையும் வகையில் வாகன ஓட்டுநா்கள் ஒலி எழுப்பவோ, முகப்பு விளக்குகளை ஒளிரவிடவோக் கூடாது என்றனா்.