மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சொத்துத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 9:10 pm

கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை சொத்துத் தகராறில் தம்பதியை அரிவாளால் வெட்டிய மகனைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள சக்கையநாயக்கனூரைச் சோ்ந்தவா் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இந்தத் தம்பதியின் மகன் சுருளி (45). இவா் அடிக்கடி பெற்றோரிடம் சொத்துக் கேட்டு தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் சொத்துக் கேட்டு பெற்றோரிடம் சுருளி தகராறு செய்தாா். இதனால், ஆத்திரமடைந்த அவா் அரிவாளால் தந்தை பாண்டி, தாய் மீனாட்சி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். 

இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற சுருளியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.