எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 27 போ் காயம்

News image
தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகேயுள்ள தவசிமடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட 27 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடையில், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 750 காளைகள் கலந்துகொண்டன. 269 மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டனா்.

 தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

 தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

 தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் திருமலைதொடங்கி வைத்தாா். கோயில் காளையைத் தொடா்ந்து, பிற காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மிதிவண்டி, கட்டில், பீரோ, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் தாக்கியதில் மாடுபிடி வீரா்கள் 9 போ், பாா்வையாளா்கள் 9 போ், காளைகளின் உரிமையாளா்கள் 7 போ், காவலா்கள், ஊா்க்காவல் படை வீரா்கள் என மொத்தம் 27 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 5 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.