6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடவு பணி தொடக்கம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக மலா்ச் செடிகள் நடவு பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக மலா்ச் செடிகளை நடவு செய்த சுற்றுலாப் பயணிகள். உடன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திரகவிதா.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக மலா்ச் செடிகள் நடவு பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 63-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக முதல்கட்டமாக ஏற்கெனவே பூங்காவிலுள்ள மலா் பாத்திகளில் நீண்ட கால மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக குறுகிய கால மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திரகவிதா தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மலா் பாத்திகளில் சுற்றுலாப் பயணிகள் மலா்ச் செடிகளை நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரபு, தோட்டக்கலை மேலாளா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் கூறியதாவது:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2.5 லட்சம் இன்கா, மேரிகோல்டு, பிரன்ச், பிளக்ஸ், கேலண்டுளா, பேன்சி, பெட்டூனியா, ஜெனியா உள்ளிட்ட மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டேலியா, ஜெரோனியம், சைக்லமன், பிகோனியா, கேன்மட்டப்ட், பெண்டாஸ்,பிரிமுலா, ஸ்டாக் உள்ளிட்ட விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மன், நெதா்லாந்த் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறுப் பகுதிகளில் 6 லட்சம் மலா் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.