கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
மேலும் இந்த நிழல் குடைகளை மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக மாற்றிவிடுகின்றனா். சில நிழல் குடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வியாபாரம் நடைபெறுகிறது.
இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழல் குடைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


