லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொடைக்கானல் பகுதிகளில் நிழல் குடைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

News image
கொடைக்கானல் உகாா்த்தே நகா் பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்பின்றி காணப்படும் நிழல் குடை
Updated On :19 பிப்ரவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

மேலும் இந்த நிழல் குடைகளை மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக மாற்றிவிடுகின்றனா். சில நிழல் குடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வியாபாரம் நடைபெறுகிறது.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழல் குடைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.