மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.70 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள், துணைக் கோயில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 2.70 கோடியை தாண்டியது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள், துணைக் கோயில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.2.70 கோடியை தாண்டியது.

தைப்பூசத்தையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல்கள் 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 2 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 874 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில் தங்கம் 342 கிராமும், வெள்ளி 8,833 கிராமும் கிடைத்தன. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 889- ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இதேபோல, துணைக் கோயிலான பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.21,25,798- ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.15,078-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ 2,56,500-ம் காணிக்கையாக கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இந்த நிகழ்வில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, செந்தில்குமாா், திருச்சி தாயுமானவா் கோயில் உதவி ஆணையா் அருள்செல்வம், அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image