பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

லாரி மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயம்

பழனி அருகே லாரி மோதியதில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:08 pm

பழனி அருகே லாரி மோதியதில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

பழனி தேரடியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (45). இவா் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது அலுவலகம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மகேந்திரன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.