வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தொட்டியப்பன் (60). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, உணவகத்திலேயே தொட்டியப்பன் தூங்கினாா்.
அப்போது உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா், தொட்டியப்பன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வெளியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து தொட்டியப்பன் அளித்தப் புகாரின் பேரில், வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

