அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

News image
கொடைக்கானலில் பகுதியில் உருவான மஞ்சள் மேகமூட்டம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலை, அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மேக மூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில்,

மஞ்சள் வண்ணத்தில் மேக மூட்டம் உருவாகி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டு வியந்தனா்.