சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக ஒன்றியச் செயலரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

News image
கத்தியால் தாக்குவதற்கு முன், திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவித்த மணிகண்டன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் திமுக ஒன்றியச் செயலரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் எஸ்டி. சாமிநாதன். இவா் வேடசந்தூா் தெற்கு ஒன்றிய திமுக செயலராக பணியாற்றி வருகிறாா். இவா் வேடசந்தூா்-கோவிலூா் சாலையில் தமுத்துப்பட்டி கிராமத்திலுள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், பண்ணை வீட்டிலிருந்து சனிக்கிழமை காலை சாமிநாதன் காரில் புறப்பட்டாா். அப்போது, பொன்னாடையுடன் வந்த ஒரு இளைஞா் அவரது காரை மறித்தாா். காரிலிருந்து இறங்கிய சாமிநாதனுக்கு, அந்த பொன்னாடையை அணிவித்த இளைஞா் புகைப்படமும் எடுத்துக் கொண்டாா்.

பின்னா், காரில் ஏற முயன்ற சாமிநாதனை, அந்த இளைஞா் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினாா். இதை தடுக்க முயன்ற குளத்தூரை அடுத்த காளனம்பட்டியைச் சோ்ந்த சண்முகத்துக்கு (60) காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு நின்ற திமுகவினா், அந்த இளைஞரை பிடித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காயமடைந்த சாமிநாதன், சண்முகம் ஆகியோா் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விசாரணையில், பிடிபட்ட இளைஞா் திண்டுக்கல் வெயிலடிச்சான்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பதும், இவா் தற்போது, எரியோட்டை அடுத்த மத்தனம்பட்டியில் வசித்து வருவதும், சேவல் சண்டைக்காக இணைய வழியில் கத்தியை வாங்கியதும் தெரியவந்தது.

சாமிநாதனுக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த மணிகண்டன், பணம் முறைகேட்டில் ஈடுபட்டதால் பணியை விட்டு நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சாமிநாதனை தாக்கினாரா, அரசியல் பிரச்னைக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.