தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு

News image
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

வார விடுமுறையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான கால நிலை நிலவியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறவிருப்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. எனினும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.