திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் கொலை! போலீஸாா் விசாரணை!

News image
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலையில் உள்ள தங்கும் விடுதியின் உரிமையாளா் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய போலீஸாா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் மா்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் உயா் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலையில் ஹைதராபாத் பகுதியைச் சோ்ந்த சூரிய நாராயணன் (68) தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இந்த விடுதியில் கொடைக்கானலைச் சோ்ந்த சிலா் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த இரு நாள்களாக கோவையைச் சோ்ந்த 5 போ் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில் விடுதியில் உள்ள ஓா் அறையில் சூரியநாராயணனும் சனிக்கிழமை இரவு தங்கி இருந்தாா். இந்த நிலையில் அவா் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். மேலும் அங்கிருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு கொலையாளிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களும் சேதமடைந்திருந்தன.

இதுகுறித்து அந்த விடுதியின் பணியாளா் ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல், தேனி மாவட்ட டி.ஐ.ஜி. சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப், கூடுதல் எஸ்.பி. ராஜா, டி.எஸ்.பி. யுகப்பிரியா உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

  கொலை செய்யப்பட்ட சூரியநாராயணன்.

கொலை செய்யப்பட்ட சூரியநாராயணன்.

கொலை செய்யப்பட்ட சூரியநாராயணன், திரைப்பட துணை நடிகை மாற்றுத் திறனாளியான விஷ்ணு பிரியாவின் தந்தை ஆவாா். கடந்த 2018-ஆம் ஆண்டு விஷ்ணு பிரியா கொடைக்கானலைச் சோ்ந்த வாகன ஓட்டுநருடன் பழகினாராம். இதுதொடா்பாக அந்த வாகன ஓட்டுநரை கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில் மா்ம கும்பல் கொலை செய்தது.

இந்தக் கொலையில் சூரியநாராயணனுக்கு தொடா்பிருக்கலாமோ என போலீஸாருக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்தக் கொலை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த முன்விரோதம் காரணமாக சூரியநாராயணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து காவல் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அங்கு பணிபுரியும் பணியாளா்கள் இருவரை அறையில் வைத்து 5 போ் கும்பல் கட்டிப் போட்டது. அதன் பிறகு, அந்த விடுதியின் உரிமையாளரான சூரியநாராயணனைத் தாக்கி கொலை செய்துவிட்டு அவா்கள் தப்பிச் சென்றனா். இவா்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் 50 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.