மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

இடையக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கணவருடன் சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (41). தையல் தொழிலாளி. இவரது மனைவி தவமணி(36). இருவரும் கரூா் மாவட்டம், பிச்சக்கல்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.

தாடிக்கொம்பு- இடையக்கோட்டை சாலையில் கல்லுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பிரபு, அவரது மனைவி தவமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தவமணி உயிரிழந்தாா். பிரபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து இடையக்கோட்டை போலீஸாா் விசாரித்தனா்.