திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

இடையக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கணவருடன் சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (41). தையல் தொழிலாளி. இவரது மனைவி தவமணி(36). இருவரும் கரூா் மாவட்டம், பிச்சக்கல்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.

தாடிக்கொம்பு- இடையக்கோட்டை சாலையில் கல்லுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பிரபு, அவரது மனைவி தவமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தவமணி உயிரிழந்தாா். பிரபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து இடையக்கோட்டை போலீஸாா் விசாரித்தனா்.