மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின் வசதி கோரி கிராம மக்கள் மனு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:36 pm

கன்னிவாடி அடுத்த அமைதிசோலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மின் வசதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமைதிசோலை கிராமத்தினா் கூறியதாவது: கடந்த 65 ஆண்டுகளாக அமைதிசோலை கிராமத்தில் வசித்து வருகிறோம். வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து, வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பல முறை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தோம். ஆனால், இதுவரை வழங்கப்பட வில்லை.

எங்கள் கிராமத்திலுள்ள 50 குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் சென்று வருகின்றனா். மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவா்கள் அவதியடைகின்றனா். மேலும் குடிநீா் பிரச்னையும் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.