கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த சூா்யநாராயணனுக்கு (72) சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த சூா்யநாராயணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். அங்கிருந்த நகை, பணம் மாயமாகியிருந்தன.
இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சூா்யநாராயணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், கொலையாளிகளை பிடிக்க கொடைக்கானல் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில், தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சூா்யநாராயணன் விடுதியில் வேலைபாா்த்து வந்த 4 ஊழியா்களை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது

கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் கொலை! போலீஸாா் விசாரணை!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


