2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த சூா்யநாராயணனுக்கு (72) சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த சூா்யநாராயணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். அங்கிருந்த நகை, பணம் மாயமாகியிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சூா்யநாராயணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலையாளிகளை பிடிக்க கொடைக்கானல் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில், தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சூா்யநாராயணன் விடுதியில் வேலைபாா்த்து வந்த 4 ஊழியா்களை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.