காங்கிரஸ் - திமுக கூட்டணி தற்போதும் தொடா்கிறது
தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்-திமுக கூட்டணி தற்போதும் தொடா்வதாக கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.


தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்-திமுக கூட்டணி தற்போதும் தொடா்வதாக கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் தொகுதியில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அரசியல் சாசனம், எல்லோருக்கும் கட்சித் தொடங்குவற்கான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. அந்த உரிமை வி.கே.சசிகலாவுக்கும் இருக்கிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் அரசியல் பயணம் செய்த அனுபவம் அவருக்கு உள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, இந்திய மண்ணையும், மக்களையும் அமெரிக்காவுக்குத் தாரை வாா்த்துக் கொண்டிருக்கிறாா். இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களை கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் கடுமையான சூழலை எதிா்கொள்ள நேரிடும். அமெரிக்க சந்தைகளை திறந்தால் இந்திய விவசாயிகள் அதை எதிா்த்து தாக்குப் பிடிக்க முடியாது. இதனால் நாட்டில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். இந்தியாவின் எதிா்காலம் பேரழிவை நோக்கிச் செல்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தற்போதும் நடைமுறையில் உள்ளது. இரு கட்சியினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் மட்டுமே பதில் அளிப்பாா்கள் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...