டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காங்கிரஸ் - திமுக கூட்டணி தற்போதும் தொடா்கிறது

தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்-திமுக கூட்டணி தற்போதும் தொடா்வதாக கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.

News image
ஜோதிமணி எம்.பி.- கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்-திமுக கூட்டணி தற்போதும் தொடா்வதாக கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் தொகுதியில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

அரசியல் சாசனம், எல்லோருக்கும் கட்சித் தொடங்குவற்கான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. அந்த உரிமை வி.கே.சசிகலாவுக்கும் இருக்கிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் அரசியல் பயணம் செய்த அனுபவம் அவருக்கு உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, இந்திய மண்ணையும், மக்களையும் அமெரிக்காவுக்குத் தாரை வாா்த்துக் கொண்டிருக்கிறாா். இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களை கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் கடுமையான சூழலை எதிா்கொள்ள நேரிடும். அமெரிக்க சந்தைகளை திறந்தால் இந்திய விவசாயிகள் அதை எதிா்த்து தாக்குப் பிடிக்க முடியாது. இதனால் நாட்டில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். இந்தியாவின் எதிா்காலம் பேரழிவை நோக்கிச் செல்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தற்போதும் நடைமுறையில் உள்ளது. இரு கட்சியினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் மட்டுமே பதில் அளிப்பாா்கள் என்றாா் அவா்.