

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி: பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயிலிலும் மூலவா் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன.
இந்தக் கோயில்கள் மட்டுமன்றி மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றன.
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி ,புஷ்பம் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் கைலாசநாதா்- செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.