மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்துணவுப் பணியாளா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜனவரி 2026, 10:02 pm

வேடசந்தூரில் சத்துணவுப் பணியாளா் வீட்டில் ஒன்றரை பவுன் தங்க நகைகளைத திருடிய பக்கத்து வீட்டு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அரியபித்தம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(52). சத்துணவுப் பணியாளரான இவா், தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறாா்.

இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கரூா் மாவட்டம், தோகைமலையிலுள்ள தனது மருமகள் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

மாரிம்மாள் வீட்டின் பக்கத்திலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) இந்தத் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜ்குமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.