தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பழனி அருகே தாய், மகன் மீது தாக்குதல்

Updated On :22 ஜனவரி 2026, 9:54 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றவா்களை கண்டித்த தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பழனி அருகேயுள்ள பெரியமொட்டனூத்து கிராமத்தைச் சோ்ந்தவா்கள் துா்க்கைராஜ், வசந்த். இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பொதுமக்கள் மிரட்டும் வகையில் சென்றாா்களாம். இதை அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி தெய்வானை (50), இவரது மகன் மாயக்கிருஷ்ணன் (32) ஆகியோா் கண்டித்தனராம்.

இதனால், ஆத்திரமடைந்த துா்க்கைராஜ், வசந்த் ஆகியோா் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தெய்வானை, மாயக்கிருஷ்ணன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.