உயிரிழப்பு (கோப்புப் படம்)
உயிரிழப்பு (கோப்புப் படம்)

பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள வி.கே. மில்ஸ் கோபாலபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் விஜய் (28). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த இவா், வியாழக்கிழமை காலை நண்பரை தாளையூத்தில் இறக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பின்னால் கேரள மாநிலம், மலப்புரத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்காவுக்கு சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் வந்த இரு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com