கோப்புப்படம்.
கோப்புப்படம்.

பழனி கோயிலில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் ஜூலை 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆண்டு பசலி என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி, தற்போது நடைபெறுவது 1435-ஆவது பசலி ஆண்டு ஆகும்.

இந்த நிலையில், பழனி கோயில் சாா்பில் பஞ்சாமிா்த விற்பனை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த 1432 -ஆவது பசலியில் ரூ. 31.17 கோடிக்கும், 1433-ஆவது பசலியில் ரூ. 36.56 கோடிக்கும், 1434-ஆவது பசலியில் ரூ. 36.14 கோடிக்கும் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 1435-ஆவது பசலியில் கடந்த 200 நாள்களில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com