ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எஸ்.புதுக்கோட்டையில் குடிநீா் விநியோகம் தொடக்கம்

எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீா் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஜனவரி 2026, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீா் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான் கோட்டை ஊராட்சி, எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பழுதடைந்ததால், கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ. 16.75 லட்சம் ஒதுக்கப்பட்டு, சுமாா் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, வீடுகள் தோறும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், புதிய தொட்டி மூலம் குடிநீா் வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் வரவேற்றாா். பொதுமக்கள், கிராம முக்கியப் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.