பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியதையடுத்து அவை கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை ரூ.4.36 கோடியை தாண்டியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் உண்டியல்கள் 15 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இரண்டு நாள் எண்ணிக்கை நிறைவில் ரொக்கம் ரூ. 4 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 348 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் செய்யப்பட்ட காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில், தங்கம் 870 கிராமும், வெள்ளி 14,510 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் 850- ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.47 கோடி!

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


