பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.53 கோடிக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனி அருகேயுள்ள வயலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.
பழனி அருகேயுள்ள வயலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.
Updated on

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.53 கோடிக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

பழனி அருகேயுள்ள வயலூரில் 60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றும் விழா, 2, 000 மரக்கன்றுகள் நடும் விழா, மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணையும் விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் வரவேற்றாா். பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் அமைச்சா் அர. சக்கரபாணி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு 60 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். பிறகு அவா் பேசியதாவது: பிரிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருள்களை அங்கேயே பெற்றுக் கொள்ள வசதியாக ரூ. 53 கோடியில் 6,800 விற்பனை முனைய இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் 2,536 பகுதி நேர கடைகளே பிரிக்கப்பட்ட நிலையில் 52 மாத கால திமுக ஆட்சியில் 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டன என்றாா் அவா்.

இதில், தாளையம், புஷ்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியப் பகுதிகளிலிருந்து மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த பலா் திமுகவில் இணைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com