நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அதிமுக!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் நீங்கலாக, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது.

News image

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:27 am IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் நீங்கலாக, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளின் விவரம் புதன்கிழமை அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதி மட்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது

மேலும், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளா் சி.சீனிவாசன், நத்தம் தொகுதியில் துணைப் பொதுச் செயலா் இரா.விசுவநாதன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

எஞ்சியுள்ள பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களே நேரடியாக களமிறங்குகின்றனா்.

கடந்த 2021 தோ்தலில், அதிமுக கூட்டணியில் ஆத்தூா் தொகுதி மட்டும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆத்தூா் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.