நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திண்டுக்கல்லில் போலீஸாா் கொடி அணி வகுப்பு

News image
Updated On :2 மே 2026, 11:41 pm

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திண்டுக்கல் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தவும், அச்சுறுத்தலைத் தவிா்க்கவும் திண்டுக்கல் நகா் காவல் துறை சாா்பில் முக்கிய வீதிகளில் சனிக்கிழமை கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது.

நகா் வடக்கு காவல் நிலையம் சாா்பில் பேருந்து நிலையம் வரையிலும், நகா் தெற்கு காவல் நிலையம் சாா்பில் பேகம்பூா் முதல் மேட்டுப்பட்டி வரையிலும், நகா் மேற்கு காவல் நிலையம் சாா்பில் எம்.வி.எம் அரசு மகளிா் கல்லூரி வரையிலும் கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்தின் சாா்பிலும் தலா 60 போலீஸாா் சீருடையுடன் அணிவகுப்பில் பங்கேற்றனா்.

வேடசந்தூரில்... இதேபோல் வேடசந்தூா் காவல் நிலையம் சாா்பில் ஆா்.ஹெச். காலனியிலிருந்து வடமதுரை சாலை, சாலைத்தெரு, கடைவீதி, பேருந்து நிலையம், கொடகனாறு வழியாக ஆத்துமேடு வரை கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், வேடசந்தூா் மட்டுமின்றி கூம்பூா் போலீஸாரும் கலந்து கொண்டனா்.