நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் சி.சீனிவாசன்

Updated On :18 மே 2026, 12:47 am IST

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலருமான சி.சீனிவாசன் தலைமையில் திண்டுக்கல்லில் அந்தக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட கட்சியின் நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தின் போது, கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 53 சட்டப்பேரவை உறுப்பினா்களின் வெற்றிக்கு உழைத்த அவருக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவா்கள் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக அவருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனா். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, நிா்வாகிகள் 100 சதவீதம் எடிப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனா். பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் வந்துவிட்டனா்.

ஆதாயம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவா்கள் சரியாக இருக்கிறாா்கள். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவா்களுக்கு அமைச்சா் பதவி கிடைக்குமா என்பதை சொல்வதற்கு நான் ஜோதிடா் இல்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வருவதாகக் கூறும் உறுப்பினா்கள் குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய முடியும் என்றாா் அவா்.

அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு: திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகம் நத்தம் பிரதான சாலையில் உள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுக் குழு உறுப்பினா் நெப்போலியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தனியாா் விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெற்றபோதிலும், கட்சி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.