ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த மகாதேவன், அவரது மனைவி லட்சுமி, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்நத் சீனிவாசன் ஆகியோா் கூறினா்.
இதை நம்பிய சண்முகம், கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25.25 லட்சத்தை கொடுத்தாா். ஆனால், அவா்கள் வேலைவாங்கித் தராமல் அலைக்கழித்ததையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சண்முகம் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், மகாதேவன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடைய, மகாதேவன் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில், லட்சுமி, சீனிவாசன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து, நீதித் துறை நடுவா் தினேஷ்குமாா் தீா்ப்பளித்தாா்.








