சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

News image

கொடைக்கானல் நீா்மட்டம் குறைந்து காணப்படும் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம்

Updated On :28 மே 2026, 3:45 am IST

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போதிய மழையில்லாததால் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம் வற்றியது. இதனால், குண்டாறு நீா்த் தேக்கத்திலிருந்து 10-நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள ஜிம்கானா சாலையிலுள்ள

கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அனுமதியின்றி ஏரியில் மோட்டாா் அமைத்து லாரி மூலம் இரவு நேரங்களில் தண்ணீா் திருடிச் சென்று ஒரு லாரி ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை செய்கின்றனா். மாசடைந்த இந்த தண்ணீரை சுற்றுலாப் பயணிகளின் குடிநீா் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு வழங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு வெளியூா்களிலிருந்து வந்துள்ள 450 போலீஸாா் அரசுப் பள்ளிகளில் தங்கியுள்ளனா். இவா்கள் தங்கியுள்ள இடங்களில் சீராக குடிநீா் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.