பழனி-திருச்செந்தூர் ரயிலின் பயண நேர்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: குமாரபுரம்-கோவில்பட்டி-நல்லி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல்(செவ்வாய்க்கிழமை) வண்டி எண்.56769 பழனி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் மதுரையில் இருந்து காலை 10.15 மணிக்கு பதிலாக பிற்பகல் 12 மணிக்கு புறப்படும்.
இந்த மாற்றம் தாற்காலிக பராமரிப்பு பணி முடியும் வரை மட்டுமே. வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் மதுரையில் இருந்து வழக்கம்போல காலை 10.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.