திருவாதவூரை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் பொன்னையன் (34). இவர் வியாழக்கிழமை தனது வீட்டு ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மேலூர் போலீஸார் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருவாதவூரைச் சேர்ந்த பொன்னையா, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தர்ஷினி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்தனர்.
ஆனால், அண்மையில் இருவரையும் சமாதானப்படுத்தி உறவினர்கள் சேர்த்து வைத்தனர்.
இந்நிலையில், பொன்னையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் தர்ஷினியிடம் விசாரித்து வருகின்றனர்.